-----மாற்றங்கள் -------
அன்றோ அமைதியான சுபாவம் உனக்கு,
நானோ ஆர்பாட்டமானவன்,
ஆனால் இன்றோ நமக்குள் பிரிவு வந்தவுடன்,
என்னை திட்டுவதற்கென்றே பிறந்து வந்தது போல
இப்போதேல்லாம் அப்படி திட்டுகிறாய்...
நானோ எல்லாவற்றையும் கேட்டபடி அமைதியாக...........
புரிகிறது கண்ணே...
காதல் என்பது உனக்குள் நான்,
எனக்குள் நீ,என்பது தானே,
எனவே,
உன்னுள் நான் இருப்பதால் நீ ஆர்பாட்டமாகவும்,
எனக்குள் நீ இருப்பதால் நான் அமைதியாகவும்..........
No comments:
Post a Comment