3.3.10

வேண்டிடும் மனசு...

அவள் என்னோடு இல்லையே என்ற கவலை...
அன்பாய் இணைந்து செல்வோரை பார்க்கையில் ஏக்கம்...
அவள் எப்போது தான் நன்றாய் பேசுவாள் என்ற எதிர்பார்ப்பு... ஏமாற்றபட்டோமோ ? என்ற ஆதங்கம்...
எதனால் இந்த பிரிவு என்ற கேள்வி?...
எவ்வளவு சொன்னாலும் புரிந்து கொள்ளாத,
அவள் மீது ஆத்திரம்,...
அவளின்றி எப்படி வாழ போகிறோம் என்ற கவலை...
மகிழ்வான வாழ்வில் திடிரென்ற பிரச்சனைகளால் கோபம்...
என்று இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும்...
கடவுள் முன் சென்றவுடன்,
அபி நன்றாய் இருக்கவேண்டும்...
என்று மட்டும் வேண்டி திரும்பும்...
மனசு.?

10.11.09


                       ஏங்கும் மனசு...


என்ன தான், உனது வெறுப்பினை,
மனது ஏற்று கொண்டாலும்...
இயல்பு நிலையில் வாழ தொடங்கினாலும்...
என் தோழிகளின் வலைப்பதிவுகளில்...
அவர்தம்..நெஞ்சம் கவர்ந்தவர் பற்றி...
எழுதிய கவிதைகளை படிக்கும் போது...
இதில் நூறில் ஒரு பகுதி அன்பாவது..
என் மீது நீ காட்டியிருக்கலாமே..
அபி...
என்று ஏக்கத்தில்..
தேம்புது மனசு....

12.10.09



>>>>>>வசந்தம்<<<<<<<


வறண்ட என் வாழ்வில் வசந்தமாய் வந்தவளே..
என் வாழ்நாள் முழுவதும்,
என்னுடன் இருந்திருக்கலாமே...
வசந்தத்தை வாழ்நாள்
முழுவதும் தந்திருக்கலாமே...