9.8.09

அன்பும் <<<>>>பிரிவும்
அபி சொல்கிறாள்...
பிரிவு தான் உண்மையாம்...
நான் அவளை மறந்து
என் வாழ்கையை வாழ வேண்டுமாம்.
அடியே பெண்ணே,
நமக்குள் பிரிவு என்பது
தெரிந்த ஓன்று தான்
எனினும் அந்த பிரிவு வரும் வரை
வாழ்கையை வாழலாமே...

8 நிமிட ஆயுள் கொண்ட
ஈசல்கள் பூச்சிகள் கூட..பூமியில்
மகிழ்வாய் வாழ்ந்து மறைகின்றது..

என்றாவது சாக தானே போகிறோம் என்று,
எந்த மனிதனும்,
உண்ண மறப்பதில்லை,
உடுத்த மறப்பதில்லை,
தனக்கு தானே சவபெட்டிகள் செய்வதில்லை,
வாழும் வரை போராடி வாழ்கிறான்..

நாமும் வாழ்வோம் கண்ணே,
நமக்கென எதிரியாய் பிரிவு வந்தால்கூட,
நம் அன்பின் முன்
அந்த பிரிவு தோற்று போகும் படி,
நம் அன்பை பலப்படுத்துவோம்,
வாழ்க்கை வாழ்வதற்கே...
இருகரம் நீட்டி அழைக்கிறேன்
என் கரம் பிடிக்க வா...என்னுயிரே ......

No comments:

Post a Comment